அமைச்சர் ஹர்ஷனவின் விளக்கம்: "விலகுவது தீர்வல்ல, சீர்திருத்துவதே பொறுப்பு!"
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையிலும், சிறைச்சாலை அதிகாரிகளுடனும் ஏற்பட்ட கடுமையான மோதல் சம்பவத்தைத் தொடர்ந்தே இந்த அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்பதாக அறிவித்த அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவ்வாறு உள்ளே வந்தன என்பது குறித்தும், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் கண்டறிய உடனடியாக மூன்று பேர் அடங்கிய சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
சுயாதீனமான விசாரணை நடைபெற வேண்டுமாயின் அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது அவர்களின் பிரதான வாதமாகும். "பதவி விலகிச் செல்வது மிக இலகுவான காரியம்.
ஆனால், இந்த ஊழல் நிறைந்த சிறைச்சாலை நிர்வாகக் கட்டமைப்பை முழுமையாகச் சீரமைத்து, தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே உண்மையான பொறுப்பேற்றல்" என அமைச்சர் நாடாளுமன்றில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார்.
விசாரணைக்கு எவ்வித தங்குதடையுமின்றி ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு, நீர்கொழும்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் (Superintendent) மற்றும் சில உயர் அதிகாரிகள் உடனடியாக தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையின் தற்போதைய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, சிறைச்சாலை உளவுத்துறையினருடன் இணைந்து மேலதிக பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே